search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாப்பூர் வாலிபர் தாக்குதல்"

    மயிலாப்பூரில் கடன் பணத்தை கேட்டு வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    வெட்டுவாங்கேணி கஸ்தூரிபா நகரை சேர்ந்தவர் மகேஷ் கிருஷ்ணன் (வயது 32) மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் தண்ணீர் கேன் போடும் வியாபாரம் செய்து வருகிறார்.

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பாட்ஷா தோட்டம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். மாதம் தோரும் ரூ.7 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தார். இந்தநிலையில் கார்த்திக் 5 பேருடன் சென்று மகேஷ் கிருஷ்ணனிடம் கடன் பணம் முழுவதையும் திருப்பி தருமாறு கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து மகேஷ் கிருஷ்ணன் மயிலாப்புர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். #tamilnews

    ×